நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு தனது வருங்கால கணவருடன் நடிகை ரம்பா வந்து சாமி கும்பிட்டார். நடிகை ரம்பாவுக்கும், கனடா நாட்டு தொழிலதிபர் இந்திரகுமாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்திரகுமாரின் நிறுவனத்தின் விளம்பர தூதராக ஒப்பந்தமான ரம்பா, இனிமையாக பழகியதைத் தொடர்ந்து அவரையே திருமணம் செய்ய விரும்பிய இந்திரகுமார், பெற்றோர் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார். இவர்களது திருமணம் வருகிற 8ம்தேதி திருப்பதியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் நடிகை ரம்பா, அவரது தாயார் உஷா மற்றும் குடும்பத்தினர், மணமகன் இந்திரகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் காஞ்சிபுரம் கோயிலுக்கு வந்தனர். காமாட்சியம்மனை தரிசித்த அவர்கள், திருமண அழைப்பிதழை அம்பாள் முன் வைத்து அர்ச்சனை செய்தனர். அதன் பிறகு கோயிலில் இருந்து வெளியே வந்த ரம்பா, நிருபர்களிடம் உற்சாகத்துடன், பக்தியுடனும் பேசினார். அவர் கூறுகையில், ரெண்டு மாசம் முன்னாடி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து அம்பாளை கும்பிட்டேன். அப்போது அம்மன் கழுத்தில் இருந்த மாலையை எனக்கு போட்டனர். அதனுடன் அம்மனின் தாலிக்கயிறும் வந்து விழுந்தது. அப்போதில் இருந்து அம்பாள் மீது எனக்கு ரொம்ப நம்பிக்கை வந்து விட்டது. அதன் பிறகுதான் அம்பாள் அருளால் எனது திருமணமும் நிச்சயமாகியுள்ளது, என்றார். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பீர்களா? என்று கேட்டதற்கு, அதுபற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை. சீரியலில் நடிக்கும் எண்ணமும் இல்லை, என்று ரம்பா கூறினார். ரம்பா காஞ்சிபுரம் கோயிலுக்கு வந்ததால், ஏராளமான ரசிகர்களும் கோயிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் ரம்பாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.