ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'டர்ட்டி பிக்சர், கஹானி' படங்கள் மூலம் இந்தித் திரையுலகில் முன்னணி நடிகையாக இடம் பெற்று விட்டார் வித்யா பாலன். தற்போது 'பாபி ஜாசூஸ்' என்ற இந்திப் படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் பல வித்தியாசமான தோற்றங்களில் நடித்துள்ளார். ஜுலை மாதம் 4ம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்த படத்திற்காக விளம்பரப்படுத்தும் வகையில் தனியாக 'பிளாக்' ஒன்றையும் ஆரம்பித்துள்ளார் வித்யா பாலன். அதில் பாலிவுட்டில் நடக்கும் பல திரைமறைவு விஷயங்களை எழுதப் போகிறாராம். அந்த பிளாக்கிற்கு 'பாபி கோ சாப் மாலும் ஹை' என பெயர் வைத்திருக்கிறார்கள்.
இதற்கான அறிமுக விழாவில் கலந்து கொண்டு பேசும் போது வித்யாபாலன், 'திரைப்படங்களில், இனி ஐட்டம் டான்ஸ் ஆட மாட்டேன். எனக்கு அது சுத்தமாகப் பிடிக்கவில்லை. இனி என்னை நீங்கள் அம்மாதிரியான தோற்றத்தில் என்னைப் பார்க்க முடியாது, ” என பதிலளித்துள்ளார். வித்யாபாலன் கடைசியாக 2012ம் ஆண்டு வெளிவந்த 'ஃபெராரி கி சவாரி' என்ற படத்தில் ஐட்டம் டான்ஸ் ஒன்றில் ஆடினார்.
'பாபி ஜாசூஸ்' படத்தை மிகவும் எதிர்பார்க்கிறார் வித்யாபாலன். படத்தில் ஆண் கெட்டப்பிலும் நடித்து அசத்தியிருக்கிறார். தற்போதைக்கு இம்மாதிரியான வித்தியாசமான படங்களில் நடிக்கும் ஒரே இந்தி நடிகை வித்யாபாலன்தான் என பெயரெடுத்திருக்கிறார்.