'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்குத் திரையுலகில் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாக நேற்றுதான் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஆந்திர திரைப்பட வர்த்தக சபையில் நடந்த கூட்டத்தில் மிகப் பெரும் அமளி ஏற்பட்டுள்ளது. தெலுங்குத் திரையுலகுக்கென தனியாக ஆந்திரப் பிரதேச திரைப்பட வர்த்தக சபை உள்ளது. இதன் பொதுக்குழு கூட்டம் இரு நாட்களுக்கு நடைபெற்றுள்ளது. ஆந்திரப் பிரதேச திரைப்பட வர்த்தக சபை என்ற பெயரை தெலுங்குத் திரைப்பட வர்த்தக சபை என பெயர் மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் கூட்டத்தைக் கூட்டினார்கள். ஆனால், தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அதை கடுமையாக ஆட்சேபித்தனர். அதோடு கூட்டத்திலிருந்தும் வெளியேறினர்.
பொதுவாக, தெலுங்குத் திரைப்பட வர்த்தக சபை என பெயர் மாற்ற அவர்கள் விரும்பவில்லை. தெலுங்கானாவுக்கென தனியாக திரைப்பட வர்த்தக சபையை உருவாக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், இந்த கோரிக்கை குறித்து ஆந்திர திரைப்பட வர்த்தக சபை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இருந்தாலும் தெலுங்கானா உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் தங்களுக்கென தனி அமைப்பை உருவாக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
எதிர்பார்த்தபடியே தெலுங்குத் திரையுலகத்தின பிளவு ஆரம்பமாமகிவிட்டதாகத் தெரிகிறது.