இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்த ஜேம்ஸ் வசந்தன். அடிப்படையில் இசை ஆசிரியர். சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனார். அந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது. அதற்கு பிறகு பல படங்களுக்கு இசை அமைத்தாலும் அவரால் இன்னொரு ஹிட் கொடுக்க முடியவில்லை.
அதனால் இப்போது இயக்குனராகிவிட்டார். வானவில் வாழ்க்கை என்ற படத்தை இயக்க இருக்கிறார். இது ஒரு இன்னிசை சித்திரமாம். கல்லூரி மாணவர்கள் இடையே நடக்கும் கலை நிகழ்ச்சிகளை மையமாக கொண்ட கதை. இதற்கான ஹீரோ ஹீரோயின்கள் தேர்வு நடந்து வருகிறது.
இதுபற்றி ஜேம்ஸ் வசந்தன் கூறியிருப்பதாது: ஒரு படத்தில் நிறைய பாடல்கள் இருந்தால் அதனை இன்னிசை சித்திரம் என்பார்கள். அப்படியில்லை. படத்தில் நடிப்பவர்களே பாடி ஆடினால்தான் அது இன்னிசை சித்திரம். அந்த வகையில் இது இன்னிசை சித்திரம். மொத்தம் 19 பாடல்கள். ஜாஸ், ஹிப்பாப், கானா, கர்நாடகம், நாட்டுபுறம் என பல ஜானர்களில் பாடல் இடம்பெறுகிறது. அதனை எழுதி, பாடி, ஆடப் போகிறர்கள் படத்தில் நடிப்பவர்களே. என்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.