இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மோகமுள், முகம், பாரதி, பெரியார் போன்ற படங்களை இயக்கியவர் ஞானராஜசேகரன். இவர் தற்போது கணித மேதை ராமானுஜரின் வாழ்க்கை வரலாரை ராமானுஜன் என்ற பெயரில் இயக்கியுள்ளார். ஜெமினிகணேசன்-சாவித்ரியின் பேரன் அபிநய் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் சுகாசினி, ஒய.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, சரத்பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். ரமேஷ்நாயகம் இசையமைத்துள்ள இப்படத்துக்கு லெனின் எடிட்டிங் செய்துள்ளார்.
இப்படத்தின் பிரஸ்மீட் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. அப்போது, அப்படத்தில் நடித்துள்ள அனைவரும் கலந்து கொண்டு தாங்கள் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
அப்போது, டைரக்டர் ஞானராஜசேகரன் பேசுகையில், சினிமா என்பது உலக அளவில் பார்க்கும்போது உண்மையில் நடந்த சம்பவங்கள் அடிப்படையில்தான் அதிகமாக உருவாகிக்கொண்டிருக்கின்றன. சரித்திரத்தில் நடந்த ஏதாவது ஒரு விசயத்தை எடுத்துக்கொண்டுதான் பெரும்பாலான ஹாலிவுட் படங்களே தயாராகியுள்ளன.
ஆனால், நம் இந்தியாவில்தான் கற்பனையை மையப்படுத்தும் கதைகள் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. ஒரு நடிகர் வரும்போது கார், ஜீப்பெல்லாம் பறப்பது போன்றெல்லாம் நிஜத்தில் சாத்தியப்படாத விசயங்களை கற்பனை செய்து படமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் யதார்த்தம் என்பது இங்குள்ள படங்களில் குறைவாக உள்ளது.
மேலும், நம்ம ஊரில் ஒரு யதார்த்தமான கதையை படமாக்கினால் அது அவார்டு படம். பார்க்கக்கூடாத படம் என்பது போல் முடிவெடுத்து விடுகிறார்கள். ஆனால், கேரளாவில் அந்த மாதிரி உணர்வுப்பூர்வமான கதைகளைத்தான் ரசித்துப்பார்ப்பார்கள். ஆனால் நம்ம ஊரில், அவார்டு படம் என்றாலே போரடிக்கிற ஒரு படம். தியேட்டர் பககமே போகக்கூடாது என்று முடிவெடுத்து விடுகிறார்கள். அவார்டு படம் என்றால் பார்க்கக்கூடாத படமல்ல. அது ஐஎஸ்ஐ முத்திரை மாதிரி. பார்க்க தரமான, தகுதியான படம் என்பதாகும்.
மேலும், என்னைப்பொறுத்தவரை தமிழில் நேர்மையான யதார்த்தமான படங்களை எடுக்க வேண்டும் என்றுதான் உண்மைக்கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படமாக்குகிறேன். குறிப்பாக இந்த ராமானுஜன் படத்தைப்பொறுத்தவரை சுவராஸ்யமானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே கதையில் அவரது வாழ்க்கையில் நடந்த இனிமையான விசயங்களையும் சேர்த்து இயக்கியுள்ளேன். அதனால் எந்த வகையிலும் இப்படம் போரடிக்காது.
கணித மேதையைப்பற்றி படம் எடுக்கும்போது எப்படி கமர்சியலாக கொடுக்க முடியும்? என்று சிலர் கேட்கிறார்கள். ஆனால், அவர் வாழ்க்கை என்பது வெறும கணக்கு மட்டுமே நிறைந்ததில்லையே. அதற்குள்ளும் அன்பு பாசம், காதல் எல்லாமே அடங்கியுள்ளது.
மேலும, ஒரு ஆங்கில படத்தில் கணக்கு போடும் ஒருவனைப்பார்த்து, நீ என்ன பெரிய ராமானுஜனா என்று ஒருவன் கேட்கிறான். அந்த அளவுக்கு அங்கு அவர் பிரபலமாக இருக்கிறார். ஆனால் உலகத்துக்கே தெரிந்தவரான ராமானுஜரை நமக்கு தெரியவில்லை. இது ரொம்ப வேதனையாக உள்ளது. அதோடு, பாடத்திட்டத்திலும் அவரைப்பற்றி பெரிதாக சொல்லப்படவில்லை.
அமெரிக்கா, ஐரோப்பாவிளெல்லாம் அவரது புத்தகங்களை ஆராய்ச்சி செய்து புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் ராமானுஜரை யார் என்றே இன்னும் தெரிந்து கொள்ளாமல இருக்கிறோம். அப்படி இன்னும் நம் மக்கள் அறியாத ராமானுஜரின் கதைதான் இந்த படம். அதனால் தயவு செய்து இதை டாகுமெண்டரி படம் எனறு யாரும் எண்ண வேண்டாம். இதுவும் கமர்சியல் அம்சங்கள் நிறைந்த படம் என்கிறார் ஞானராஜசேகரன்.