டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பொதுவாக இயக்குனர்கள் தாங்கள் இயக்கும் படத்துக்கு விருதுகள் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் ராமானுஜன் படத்தை இயக்கி வரும் ஞானராஜசேகரன் என் படத்துக்கு விருது வேண்டாம், இது விருது படம் இல்லை. கமர்ஷியல் படம் என்கிறார். அதற்கான காரணத்தை அவர் இப்படி விளக்குகிறார்.
நான் இயக்கிய மோகமுள், பாரதி, பெரியார் படத்துக்கு விருதுகள் கிடைத்தது. நான் விருதை மதிக்கிறேன். விரும்புகிறேன். ஆனால் ராமானுஜன் படத்தை விருது படம் என்று குறிப்பிடாதீர்கள். காரணம் தமிழ் நாட்டில் விருது படங்களுக்கு மரியாதை இல்லை. விருது படங்கள் என்றால் மெல்ல நகரும் கதை, போரடிக்கும் படம் என்ற இமேஜ் இருக்கிறது. படத்தை நல்லபடி பாராட்டி எழுதிவிட்டு கடைசியில் இந்தப் படத்திற்கு விருது கொடுக்கலாம் என்ற எழுதிவிட்டால் அந்தப் படத்தை பார்க்க யாரும் வரமாட்டார்கள்.
அதனால் ராமானுஜன் படத்தை விருது படம் என்று குறிப்பிட வேண்டாம். இதுவரை நான் எடுத்த படங்களிலேய அதிக செலவில் எடுக்கப்பட்டுள்ள படம். நான்கு இளைஞர்கள் அவர்கள் வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை என்னை நம்பி இதில் போட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அதை நான் திருப்பித் தரவேண்டும். அதற்கு உதவுங்கள். மக்களை, மாணவர்களை தியேட்டருக்கு வரச் செய்யுங்கள். அதுதான் இந்தப் படத்துக்கும், எனக்கும் நீங்கள் செய்யும் உதவி. என்றார் உருக்கமாக.