'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
1995-ல் சுரேஷ்கோபி நடித்த சக்ஷ்யம் என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர் மஞ்சு வாரியர். அதையடுத்து, மோகன்லால், மம்மூட்டி என மலையாள சினிமாவில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஒரு ரவுண்டு வந்த அவர், சுமார் 20 படங்களில் நடித்திருந்தபோதும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருந்தார்.
அதையடுத்து மலையாள நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்ட மஞ்சுவாரியர் நடிப்புக்கு முழுக்குப்போட்டார். ஆனால், 13 ஆண்டுகளுக்குப்பிறகு திலீப்புடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக விவாகரத்து கேட்டு வழக்குத தொடர்ந்துள்ள மஞ்சுவாரியர் மீண்டும் கலைச்சேவை ஆற்ற களமிறங்கியிருக்கிறார்.
அந்த வகையில், முதல் ரவுண்டில் மலையாளத்தில் மட்டுமே நடித்த மஞ்சு, இந்தமுறை தென்னிந்திய அளவில் நடிப்பதற்கான படவேட்டையை முடுக்கி விட்டிருக்கிறார். அதோடு, மலையாளத்தில் தற்போது அவர் நடித்து வெளிவந்துள்ள புதிய படமான ஹவ் ஓல்டு ஆர் யூ மெகா ஹிட்டடித்திருப்பதால் உற்சாகத்தில் இருக்கிறார் மஞ்சுவாரியர்.
அதோடு, அந்த படத்தை பார்த்து, அவரது நடிப்பை சில சீனியர் நடிகர் நடிகைகளே அவரை பாராட்டி வருகிறார்களாம். இதனால், புதிய ரத்தம் பாய்ந்தது போன்ற மனநிலையில் இருக்கும் மஞ்சுவாரியர், இதுவரை தான் நடிக்காத வித்தியாசமான கதைகளங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதைகளை தேர்ந்தெடுக்கத் தொடங்கியிருக்கிறார்.