ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் சித்தார்த்துக்கு ஏற்கனவே திருமணமாகி பின்னர் மனைவியை நிரந்தரமாக பிரிந்து விட்டார். அதையடுத்து, தெலுங்கு படமொன்றில் சமந்தாவுடன் இணைந்து நடித்தபோது அவர்களுக்கிடையே நட்பு வளர்ந்து பின்னர் இறுக்கமானது. வெளியிடங்களுக்கும் ஜாலியாக சுற்றித்திரிந்ததோடு, சமந்தாவின் குடும்பத்தோடு நெருக்கமாகிப்போனார்.
அதனால், அவர்கள் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் அவ்வப்போது செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதுபற்றி சமந்தா பெருசாக பீல் பண்ணாதபோதும் , குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும் என்பதுபோல், சமந்தாவைப்பற்றி சாதாரணமாக கேள்வி கேட்டாலே டென்சனாகி விடுகிறார் சித்தார்த். நடிகர் நடிகைகளின் சொந்த வாழ்க்கையை கிண்டி கிழற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு வருகிறார்.
இந்தநிலையில், சித்தார்த்துக்கும், அவரது முதல் மனைவிக்கும் பிறந்த ஒரு ஆண் குழந்தை தற்போது சித்தார்த் வசம் இருப்பதாக கடந்த சில வாரங்களாக ஒரு செய்தி உலவிக்கொண்டிருககிறது. ஆனால் இந்த செய்தி சித்தார்த்தின் காதுக்கு சென்றபோது, முதன்முறையாக இந்த ஒரு விசயத்தை மட்டும் ஒத்துக்கொள்வதாக சொன்னார். அதையடுத்து என் 10 வயது மகனின் பெயர் மெளக்லி என்று சொல்லி இவர்தான் அவர் என்று ஒரு நாயைக் காட்டுகிறார். இந்த நாயைதான் என் மகன் போன்று வளர்த்து வருகிறேன். இதில் எந்த ரகசியமும் இல்லை என்கிறார் சித்தார்த்.