ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பசங்க படத்தில் ஆசிரியராக நடித்து பிரபலமானவர் ஜெயப்பிரகாஷ். அதையடுத்து, நான் மகான் அல்ல, மங்காத்தா, பண்ணையாரும் பத்மினியும் உள்பட ஏராளமான படங்களில் நடித்திருக்கும் இவர் ஒரு காலத்தில் சினிமா தயாரிப்பாளராக இருந்தவர். அப்போது ஜி.ஜே.சினிமா சார்பில் ஞானவேல் உடன் இணைந்தும் பல படங்களை தயாரித்துள்ளார்.
ஆனால், ஒரு கட்டத்தில் கூட்டு தயாரிப்பில் இருந்து விலக்கிக்கொண்ட ஜெயப்பிரகாஷ், பலருக்கு தாங்கள் கொடுக்க வேண்டிய கடன் அனைத்தையும ஞானவேல் பொறுப்பில் விட்டு விட்டு தான் விலகிக்கொண்டாராம். அதனால் இந்த விசயத்தை தயாரிப்பாளர் சங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ள ஞானவேல், ஜெயப்பிரகாஷ் மீது புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து நடந்த விசாரணைக்குப்பிறகு ஞானவேல் , ஜெயப்பிரகாஷ் ஒன்னேகால் கோடி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாம். அதையடுத்து ஞானவேல்-க்கு 41 லட்சம் செக் கொடுத்திருக்கிறார் ஜெயப்பிரகாஷ். ஆனால், அந்த செக் ரிட்டனாகி விட்டதாம்.
இதையடுத்து, ஞானவேல் மீண்டும் ஜெயப்பிரகாஷ் மீது புகார் அளித்ததையடுத்து, அவர் சினிமாவில் தொடர்ந்து நடிப்பதறகு தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கம் சார்பில் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இநத விசயத்தை விரைவில் நடிகர் சங்கத்திலும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வர இருக்கிறார்களாம்.