கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் |
சமீபத்தில் வெளிவந்த படம் மஞ்சப்பை, விமல், லட்சுமிமேனன், ராஜ்கிரண் நடித்திருந்தனர். ராகவன் இயக்கி இருந்தார். இந்தப் படம் ஓரளவுக்கு பேமிலி ஆடியன்சுக்கு விருப்பமானது. உடனே மறுநாளே திருட்டு விசிடியும் வெளிவந்தது. வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் படப் பெட்டிகளில் இருந்துதான் திருட்டு விசிடி தயாரகி தமிழ்நாட்டுக்குள் வரும். முதன் முறையாக தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள ஒரு தியேட்டரில் திருட்டு விசிடி தயாரிக்கப்பட்டிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த தியேட்டருக்கு தியேட்டர் அதிபர்கள் சங்கத்திலிருந்து ரெட்கார்ட் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி மற்றும் மஞ்சப்பை படத்தின் இயக்குனர் ராகவன் ஆகியோர் போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து இதுகுறித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.
பின்னர் விக்ரமன் நிருபர்களிடம் கூறியதாவது: திருட்டு விசிடியால் சினிமா உலகம் தொடர்ந்து ஆபத்தில் இருந்து வருகிறது. பெரும் நஷ்டத்தை சந்திப்பதால் சினிமா குடும்பங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. பொதுவாக வெளிநாட்டிலிருந்துதான் திருட்டு விசிடி வரும் என்பார்கள். ஆனால் மஞ்சப்பை படத்தின் திருட்டு விசிடி தமிழ்நாட்டில் சாத்தூரில் உள்ள ஒரு தியேட்டரில் தயாராகி உள்ளது. இது எங்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இனி யாரை நம்பி நாங்கள் படம் கொடுப்பது என்று தெரியவில்லை. கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறோம். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார். என்றார்.