பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கிருஷ்ணா, புதுமுகம் மோனல் கஜ்ஜார் நடிக்கும் படம் வானவராயன் வல்லவராயன். இந்த படம் இந்த மாதம் இறுதியில் வெளிவருவதாக உள்ளது. இந்த நிலையில் படத்துக்கு தடைகேட்டு காயத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் பி.பாண்டியன் என்பவர் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
வானவராயன் வல்லவராயன் படத்தை முதலில் நான்தான் தயாரித்தேன். இதற்காக என்னுடைய வீடு, மனைவி நகைகளை விற்று 19 லட்சம் வரை செலவு செய்தேன். இந்த சூழ்நிலையில் மகாலட்சுமி மூவீஸ் நிறுவன உரிமையாளர் மதுபாலா ஹீரோ கிருஷ்ணாவை எனக்கு நன்றாக தெரியும் என்று கூறி படத்தை இணைந்து தயாரிக்க அழைத்தார். நானும் அதற்கு சம்மதித்தேன். மதுபாலா படத்தின் தயாரிப்பு பணியினை மதுபாலா கவனித்துக் கொண்டார்.
இந்த நிலையில் படம் முடிந்தபிறகு அதனை நல்ல விலைக்கு வாங்க விநியோகஸ்தர்கள் பலர் முன்வந்ததால் படத்தின் முழு உரிமையும் எழுதித் தருமாறு என்னை வற்புறுத்தினர். மிரட்டினர், ஆள் வைத்து அடித்தனர், தயாரிப்பாளர் சங்கத்தில் என் மீது புகார் கூறி, மிரட்டி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தனர். படத்துக்கு செலவு செய்த பணத்தில் 14 லட்சத்தை திருப்பித் தருவதாக கூறி 4 லட்சத்தை மட்டும் கடந்த 2012ம் ஆண்டு திருப்பித் தந்தனர். அதன் பிறகு மீதி பணத்தை தராமல் இப்போது படத்தை வெளியிட முயற்சித்து வருகிறார்கள். படத்தை வெளியிட்டுவிட்டால் எனக்கு சேர வேண்டிய பணம் கிடைக்காது. எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் வருகிற 18ந் தேதி வரை படத்தை வெளியிட தடைவிதித்தோடு, பதில் மனு தாக்கல் செய்யுமாறு தயாரிப்பு நிறுவனத்தக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.