'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் ரஞ்சித்தும், நடிகை பிரியா ராமனும் 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ரஞ்சித் பொன்விலங்கு, சிந்து நதி பூ, மறுமலர்ச்சி, பாண்டவர்பூமி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
வள்ளி படத்தில் அறிமுகமாகி பல தமிழ் படங்களில் நடித்தவர் பிரியா ராமன். தற்போது மலையாளத்தில் கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். இருவரும் இணைந்து நேசம் புதுசு என்ற படத்தில் நடித்த போது காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் 1999ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆதித்யா, ஆகாஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் இருவரும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இருவரும் விவாகரத்து கேட்டு தாம்பரம் குடும்பல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் தற்போது இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பு கூறியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரஞ்சித், பிரியாராமன் இருவரும் "நாங்கள் இருவரும் 15 வருடங்கள் நல்ல கணவன் மனைவியாகத்தான் வாழ்ந்தோம். இருந்தும் சில காரணங்களால் எங்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இணைந்து வாழ முடியாத சூழ்நிலையில் பிரிந்து செல்ல முடிவெடுத்தோம். இருவருக்கும் வெவ்வேறு பார்வைகள், பாதைகள் இருக்கிறது. அதனால் பிரிந்தோம். ஆனாலும் குழந்தைகளை பிரியா ராமன் வளர்ப்பார். ரஞ்சித் அதற்கு உதவுவார். இது இருவருமே சேர்ந்து எடுத்த முடிவுதான். திருமண பந்தத்தை தாண்டி நல்ல நண்பர்களாக இருப்போம்" என்று கூறியிருக்கிறார்கள்.