இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கரகாட்டகாரன், எங்க ஊரு பாட்டுக்காரன், பொங்கி வரும் காவேரி, அண்ணா நகர் முதல் தெரு, உள்பட ஏராளமான படங்களில் காமெடியனாக நடித்திருப்பவர் கொடுக்காபுளி செல்வராஜ். எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் கொடுக்காபுளி என்ற கேரக்டரில் நடித்து புகழ்பெற்றதால் கொடுக்காபுளி செல்வராஜ் என்றே அழைக்கப்பட்டார். சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் துணை நடிகர்கள் ஏஜெண்டாக பணியாற்றினார். பின்னர் துணை நடிகர் ஏஜெண்டுகள் சங்கத் தலைவரானார்.
58 வயதான செல்வராஜ் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை (ஜூன் 12) அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு நடிகர் சங்கம் சார்பில் இறுதி மரியாதைகள் செய்யப்பட்டது. செல்வராஜுக்கு குழந்தைகள் இல்லை. ராஜகுமாரி என்ற மனைவி மட்டும் உள்ளார்.