'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
திரையுலகப் பிரபலங்களுக்கும் ரசிகர்களுக்கும் பாலமாக விளங்குவது ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்கள்தான். தங்களின் அபிமான நட்சத்திரங்கள், இயக்குநர்கள் ஆகியோருடைய ஒவ்வொரு அசைவுகளையும் ரசிகர்கள் தெரிந்து கொள்ள இந்த சமூக வலைத்தளங்கள் பேருதவி புரிந்து வருகின்றன.
சமீபகாலமாக இந்த சமூக வலைத்தளங்களில் பிரபலங்களின் பெயர்களில் அதிக எண்ணிக்கையில் போலியான அக்கவுண்ட்டுகள் உலவ ஆரம்பித்துள்ளன. எது போலியானது? எது உண்மையானது? என்பதை அத்தனை எளிதில் யாராலும் கண்டுபிடிக்க முடியாது. சம்மந்தப்பட்டவர்களே அது என் அக்கவுண்ட் இல்லை, போலி அக்கவுண்ட் என்று சொல்லதவரை அந்த அக்கவுண்ட்டை பலரும் ஃபாலோ பண்ணி வருகின்றனர்.
இதுநாள் வரை டுவிட்டர், ஃபேஸ்புக் பக்கமே வராத பிரபலங்களில் ஒருவராக இருந்தவர் மணிரத்னம். சில தினங்களுக்கு முன் அவரது பெயரில் டுவிட்டரில் ஒரு அக்கவுண்ட் முளைத்தது. உடனே பலரும் அவரை ஃபாலோ செய்யத் தொடங்கினர். ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் மணிரத்னத்துக்கு ஃபாலோயர்கள் குவிந்தனர். அப்படி குவித்தவர்களில் திரையுலகப் பிரபலங்களும் அடக்கம். இந்நிலையில் டுவிட்டரில் உள்ள மணிரத்னம் அக்கவுண்ட் போலியானது என்று தெரிய வந்திருக்கிறது. சுஹாசினியே இதை தெரிவித்திருக்கிறார். இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.