டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
லிங்குசாமி இயக்கத்தில் அஞ்சான் படத்தில் நடித்து வரும் சூர்யா தற்போது கோவாவில் சமந்தா உடன் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் பூச்சாண்டி படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான போட்டோஷூட் கடந்த வாரம் நடைபெற்றது. விரைவில் பூச்சாண்டி படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதற்கிடையில் பூச்சாண்டி படத்தை அடுத்து எந்தப் படத்தில் நடிப்பது என்பதையும் சூர்யா முடிவு செய்துவிட்டார்.
பூச்சாண்டி படத்தைத் தொடர்ந்து சீமான் இயக்கும் படத்தில்தான் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்ருக்கிறார். கலைப்புலி தாணு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். கோபம் என பெயர் சூட்டி உள்ளார் சீமான். இந்தப் படத்தில் சூர்யா உடன் இணைந்து நடிக்கிறார் ஜெயம் ரவி. கோபம் படத்தில் சூர்யா, ஜெயம்ரவி இருவருக்கும் சமமான கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கிறாராம் சீமான்.