கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
மாநில பிரிவிற்கு முன் சென்னை மாகாணமாக இருந்த போது சென்னையில்தான் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்கள் தயாராகி வந்தன. அதன் பின் மாநில பிரிவினைக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அந்தந்த மாநிலங்களுக்கு அவரவர் மொழி பேசும் படங்களின் தயாரிப்பும் போக ஆரம்பித்தது. இருந்தாலும் தெலுங்குப் படங்கள் 90கள் வரையில் சென்னையில்தான் அதிகமாக தயாரிக்கப்பட்டு வந்தன. என்டிஆர் ஆந்திர முதல்வரான பின்தான் ஐதராபாத்தில் புதிதாக பல ஸ்டுடியோக்களை உருவாக்கி தெலுங்குத் திரையுலகை இங்கிருந்து அங்கு கொண்டு சென்றார்.
பல தெலுங்கு நட்சத்திரங்களுக்கு இன்றும் சென்னையில் வீடுகள் உள்ளன. வெங்கடேஷ், மகேஷ்பாபு போன்ற இன்றைய தெலுங்கு நடிகர்கள் கூட சென்னையில்தான் பள்ளிப் படிப்பையும், கல்லூரிப் படிப்பையும் முடித்தார்கள். பல தெலுங்கு நடிகர்கள் தமிழையும் நன்றாகவே பேசுவார்கள். சிரஞ்சீவி கூட நடிப்புப் பயிற்சியை சென்னையில்தான் படித்தார்.
இப்போது, சென்னையை விட ஐதராபாத்தான் தென்னிந்தியப் படங்களுக்கு மையமாக ஆகிவிட்டது. பல தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு சென்னையை விட ஐதராபாத்தில்தான் அதிகம் நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஆந்திராவை இரண்டாகப் பிரித்து விட்டதால், ஐதராபாத்திலிருந்து செயல்படும் திரையுலகை விஜயவாடாவிற்கு மாற்ற சீமாந்திராவின் முதல்வரான சந்திரபாபு நாயுடு முடிவெடுத்துள்ளாராம். ஆற்றங்கரை நகரமான விஜயவாடாவைச் சுற்றி இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் உள்ளன. அது மட்டுமல்ல தெலுங்கு தேசம் கட்சியைச் சார்ந்த பலரும் திரையுலகில் இருப்பதால் இந்த மாற்றத்தை எளிதில் செய்துவிடலாம் எனவும் சந்திர பாபு நாயுடு திட்டமிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.
விமானம், ரயில், பேருந்து வசதிகள் விஜயவாடாவுக்கு பயணிப்பதும் எளிதாக உள்ளது. அதோடு, விஜயவாடா ஏற்கெனவே சுற்றுலாத் தளமாக இருப்பதால், தெலுங்குத் திரையுலகையும் இங்கு மாற்றினால் சுற்றுலாவும் வளர்ச்சி பெறும் என நினைக்கிறார்களாம். அதோடு, சென்னையிலிருந்து விஜயவாடாவின் பயண தூரம், சென்னையிலிருந்து ஹைதராபாத் செல்லும் நேரத்தைக் காட்டிலும் குறைவாக இருப்பதால பல தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கு பெறுவதிலும் வசதியாக இருக்குமாம். விரைவில் இதற்கான செயல் திட்டம் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.