அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ஆஸ்கார் விருது வென்ற ஜெய்ஹோ இந்திப்பாடலை தமிழில் உருவாக்க முடிவு செய்திருப்பதாக ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். டில்லியில் பத்மபூஷன் விருது பெற்ற ரஹ்மானுக்கு டெல்லி தமிழ்ச்சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் ரஹ்மானை பாராட்டி பேசினார்கள். தமிழ் சிறுவர்கள் ஜெய்ஹோ பாடலை பாடி அசத்தினார்கள். அப்போது பேசிய ரஹ்மான், ஜெய்ஹோ இந்திப் பாடலை தமிழில் உருவாக்க முடிவு செய்துள்ளேன். தமிழ் சிறுவர், சிறுமிகள் ஜெய் ஹோ பாட்டை விழாக்களில் பாடியதை கேட்டு எனக்கு இந்த எண்ணம் ஏற்பட்டது. அடுத்த வருடம் ஜெய் ஹோ பாடல் தமிழில் வெளியாகும், என்றார்.
ஸ்லம்டாக் மில்லினர் இந்திப்படம் கடந்த வருடம் ஆஸ்கார் விருதுகளை அள்ளியது. இப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான் இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்றார். ஒரு விருது அப்படத்தில் இடம் பெற்ற ஜெய் ஹோ பாடலுக்கு கிடைத்தது. இதன் மூலம் ஜெய் ஹோ பாடல் உலகமெங்கும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.