ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த சிரஞ்சீவி அரசியல் கட்சி ஆரம்பித்து, பின் அந்தக் கட்சியை காங்கிரசுடன் இணைத்தார். சமீபத்திய தேர்தலிலும் அவரால் அரசியலில் பிரகாசிக்க முடியாமல் போய்விட்டது. இந்த சூழ்நிலையில் சினிமாவில் மீண்டும் நடிக்கலாமா என அவர் முடிவெடுத்து கதைகளையும் கேட்க ஆரம்பித்தார். சிரஞ்சீவி அடுத்து நடிக்கப் போகும் படம் அவருடைய 150வது படம் என்ற சிறப்பைப் பெறும். சினிமாவில் நடித்து ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் இடைவெளி ஆகிவிட்டதால் இன்றைய காலகட்டத்திற்கேற்ப படங்களைக் கொடுக்க நினைக்கிறாராம் சிரஞ்சீவி. அதோடு, அடுத்து நடிக்கப் போகும் படத்தின் மூலம் இழந்த இமேஜை மீண்டும் பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பிலும் இருக்கிறாராம்.
பல இயக்குனர்களைச் சந்தித்து கதைகளைக் கேட்ட சிரஞ்சீவி, எந்த மாதிரியான கதையைத் தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. முதலில் 'உய்யலவாடா நரசிம்ம ரெட்டி'யின் வாழ்க்கையைத் தழுவி படம் எடுக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால், தற்போது அதிலிருந்து மாறிவிட்டாராம். கமர்ஷியலான படத்தைக் கொடுத்தால்தான் இன்றைய இளம் ரசிகர்களையும் கவர முடியும் என்பதால் அவரது எண்ணத்தை மாற்றிக் கொண்டு விட்டார் என்கிறார்கள்.
கடைசியாக அவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த 'சங்கர்தாதா ஜிந்தாபாத்' படம் போன்றே நகைச்சுவையுடன் கூடிய படத்தில் நடிக்கலாமா என்றும் யோசிக்கிறாராம். அதே சமயத்தில் சமூக அக்கறையுடன் கூடிய ஒரு படத்தில் நடித்தால் அது அரசியலுக்கும் சரியாக இருக்கும் என்று நினைக்கிறாராம். இப்படி பல யோசனைகளில் இருக்கும் அவர் இன்னும் சில வாரங்களில் முடிவெடுத்து ஆகஸ்ட்டில் அவரது பிறந்த தினத்தில் தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட உள்ளார் என அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.