மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
'ஓம் சாந்தி ஓம்' இந்திப் படத்தின் மூலம் பிரபல விளம்பர மாடலாக இருந்த தீபிகா படுகோனே பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமானார். இவர் முதன் முதலில் நடித்தது ஒரு கன்னடப் படம். 'ஓம் சாந்தி ஓம்' படத்தின் வெற்றி அவரை மேலும் பிரபலப்படுத்தியது. தொடர்ச்சியாக பல இந்திப் படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இடம் பிடித்தார்.
“லவ் ஆஜ்கல், லஃபாங்கே பரிந்தே, காக்டெயில், ஹே ஜவானி ஹை திவானி, சென்னை எக்ஸ்பிரஸ், ராம் லீலா” என ஒவ்வொரு படத்திலும் தீபிகாவின் நடிப்பு பாராட்டப்பட்டது. பாலிவுட்டில் தென்னிந்திய நடிகைகளின் ராஜ்ஜியம் இவர் மூலமும் தொடர்கிறது. இவரைப் போலவே முன்னணி நடிகையாக உள்ள வித்யா பாலனும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது சமீபத்திய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதால் தீபிகா அவருடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியிருக்கிறாராம். இவர் நடிக்கப் போகும் அடுத்தப் படத்திற்கான சம்பளம் சுமார் 8 கோடி ரூபாய் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு, ஒரு விளம்பரப் படத்தில் நடிப்பதற்கு 5 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளமாக வாங்குகிறாராம். தீபிகாவின் இந்த சம்பள உயர்வு மற்ற நடிகைகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.
சில முன்னணி ஹீரோக்கள் கூட வாங்காத சம்பளத்தை தீபிகா வாங்குகிறாரே என மற்ற நடிகர்கள் கூட பொறாமைப்படும் அளவுக்கு தீபிகாவின் வளர்ச்சி அமைந்துள்ளது என்கிறார்கள். இயக்குனர்களுக்கு ஏற்ற விதத்தில் நடித்துக் கொடுப்பது, தாராளமாக கிளாமராக நடிப்பது ஆகியவைதான் தீபிகாவை அனைத்து இயக்குனர்களும் ஒப்பந்தம் செய்யத் துடிக்கக் காரணமாக இருக்கிறதாம். எப்படியோ, தீபிகாவின் தீவிர வளர்ச்சி பாலிவுட்டில் மற்றவர்களிடையே பொறாமைத் தீயாய் பற்றி எறிகிறதாம்.