ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தொடர்ச்சியாக ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்வதே ஸ்ருதிஹாசனின் வாடிக்கையாகிவிட்டது. அவரது மும்பை வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்தவர் மீது புகார் அளித்த விதத்தில் ஆரம்பமான சர்ச்சை, அடுத்து அவரது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்ட ஊடகங்கள் மீது புகார் அளித்த விதத்திலும் தொடர்ந்தது. தற்போது புதிதாக இன்னுமொரு சர்ச்சை எழுந்துள்ளது. ஸ்ருதிஹாசன் தற்போது, இந்திப் படப்பிடிப்பு ஒன்றிற்காக முசௌரியில் தங்கியிருக்கிறார்.
சில நாட்களுக்கு முன் குடிபோதையில் ஒரு ரசிகர் அவரது அறையை தொடர்ந்து தட்டிக் கொண்டேயிருந்திருக்கிறார். தொடர்ந்து எச்சரித்தும் அவர் கேட்காததால் அவர் மீது புகார் ஒன்றை அளித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். தற்போது அந்த நபர் மீது விசாரணை நடந்து வருகிறதாம். இதனால் ஸ்ருதிஹாசன் ரொம்பவே அப்செட்டாகி இருக்கிறார் என்கிறார்கள்.
தொடர்ந்து தன்னை ஏதாவது ஒரு வம்பில் இழுத்து வைப்பதே மற்றவர்களின் வேலையாக இருக்கிறது என கவலைப்படுகிறாராம். சில வாரங்களுக்கு முன் அவருக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் காதல் என பரவலாக செய்தி வெளியாகியிருந்தது. இப்படி தன்னை மட்டுமே குறி வைத்து ஏதாவது நடப்பதும், அதை மீடியாக்கள் ஊதி பெருசாக்கி செய்தியாக வெளியிடுவதையும் அவருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாம். திரையுலகில் தனியாக இருந்து கொண்டு முன்னேறி வரும் தனது வளர்ச்சியைப் பிடிக்காத யாரோ ஒரு சிலர்தான் இதற்கெல்லாம் காரணம் என நினைக்கிறாராம்.
மும்பையில் கூட ஸ்ருதிஹாசன் தனியாகத்தான் வசித்து வருகிறார். தனது பாதுகாப்புக்காகவே முழு பாதுகாப்புடன் கூடிய ஒரு பிளாட்டிற்கு குடிபுகுந்திருக்கிறார். இனி, தனியாக பாதுகாவலர்களை வைத்துக் கொள்ளலாமா எனக் கூட யோசித்து வருகிறாராம்.