தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இசையமைப்பாளர் அனிருத் பார்க்கத்தான் சுள்ளான் மாதிரி இருப்பார். ஆனால் அவர் செய்கிறதெல்லாமே பெரிய பெரிய வேலைகள். தனுஷ் நடித்த 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர், அந்த படத்தில் இடம்பெற்ற கொலைவெறி பாடல் மூலம் பிரபலமானார். தற்போது விஜய் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இதற்கிடையே ஆண்ட்ரியாவுடன் நட்பில் இருந்தபோது அவர்கள் நெருக்கமாக இருந்த முத்தக்காட்சி படங்கள் வெளியாகின. இந்தப்படத்தை அனிருத் தான் வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் பலத்த அதிர்ச்சியடைநத ஆண்ட்ரியா, அத்தோடு அனிருத்துடனான நட்பை துண்டித்துக்கொண்டார். அந்த சம்பவத்தை அடுத்து அனிருத்துடன் சாதாரணமாக பேசிப் பழகவே நடிகைகள் பயந்து வருகின்றனர்.
இந்த நிலையில், எதிர்நீச்சல் படத்துக்கு இசையமைத்தபோது அப்படத்தின் நாயகியான ப்ரியா ஆனந்துடன் நட்பு வளர்க்கத் தொடங்கினார். ஏற்கனவே ஆண்ட்ரியா, அனிருத்துடன் லிப்லாக் சர்ச்சையில் சிக்கிய விவகாரம் தெரிந்தபோதும் தாராளமாக பழகி வருகிறார் ப்ரியாஆனந்த். ஆனால், அவர்கள் அடிக்கடி படப்பிடிப்பு தளங்களில் தோள் போட்டுக்கொண்டு திரிவதால், இப்போது அனிருத், ப்ரியா ஆனந்திற்கிடையே காதல் தீ பற்றிக்கொண்டு எரிவதாக செய்திகள் பரவியுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த ப்ரியா ஆனந்த், இந்த செய்தி தனது மார்க்கெட்டை வீழ்த்தி விடக்கூடாது என்பதற்காக, அனிருத் மற்றவர்களுடன் எப்படியோ எனக்குத் தெரியாது. ஆனால், என்னுடன் நண்பராக மட்டுமே பழகி வருகிறார். அதிலும் என்னிடம் ரொம்ப டீசன்டாகவும் நடந்து கொள்கிறார். அதனால், அவரை தவறானவர் என்று சொல்வதை என்னால் ஏற்க முடியாது என்று இந்த செய்தியை மறுத்துள்ளார்.
இதையடுத்து, இப்படித்தான் வாலு படத்தில் நடிக்க கமிட்டானபோது, சிம்புவிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பலர் சொல்லியும் கமிட்டானார் ஹன்சிகா. அதையடுத்து ஒரே மாதத்தில் காதலில் விழுந்தவர், சிம்பு மற்றவர்கள் சொன்ன மாதிரியில்லை. ரொம்ப டீசன்டாக பழகுகிறார். அந்த நல்ல குணம்தான் என்னை அவரிடம் காதல்வயப்பட வைத்து விட்டது என்று பின்னர் சொன்னார்.
அதேபோல், இப்போது டீசன்டாக அனிருத் பழகுவதாக சொல்லும் ப்ரியாஆனந்த், கூடிய விரைவிலேயே அவர் கேரக்டர் ரீதியாக என்னை கவர்ந்து விட்டார் என்று சொல்லி காதல் வலையில் விழுந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள் அவர்களுக்கு நெருக்கமானவர்கள்.