தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர்கள் சினிமாவில் வளருவதற்கு அவர்களின் திறமை மட்டுமே போதாது. அதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் அந்த நடிகர்கள் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆவார்கள். அதற்காகத்தான் தாங்கள் நடித்த படங்கள் வெளியாகும்போது, கட்அவுட், போஸ்டர்கள் என்று ஒட்டி பரபரப்பு கூட்டுவதற்காக ரசிகர் மன்றங்களை உருவாக்குகிறார்கள் நடிகர்கள். இதில் சிலர் தங்கள் படம் ரிலீசாகும்போது, கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம், பட்டாசு, தாரை தப்பட்டை என்று அடித்து அமர்க்களப்படுத்தவே பெரும் தொகையை செலவிடுகிறார்கள்.
அந்தவகையில், பென்சில் என்ற படத்தில் நடித்து விட்டு அடுத்தபடியாக த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்ற படத்தில் நடிக்கத் தயாராகிக்கொண்டிருக்கும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரும், தற்போது தனக்கு தமிழகமெங்கிலும் ரசிகர் மன்றங்களை உருவாக்கியுள்ளார். சமீபகாலமாக ரசிகர் மன்றங்களை சமூக சேவை அமைப்புகள் போன்று சில நடிகர்கள் நற்பணி மன்றங்கள் என்று குறிப்பிடுவதால் ஜி.வி.பிரகாசும், நற்பணி மன்றம் என்ற பெயரிலேயே துவங்கியுள்ளார்.
இதையடுத்து முதல்கட்டமாக அவரது ரசிகர்கள், இன்று ஜூன் 13-ந்தேதி ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு பிறந்த நாள் என்பதால், பல ஊர்களில் அவரை வாழ்த்த போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளனர். குறிப்பாக, பாண்டிச்சேரியில் நேற்றே பல ஏரியாக்களில் அவரது பிறந்த நாள் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. அதில் ஹீரோயிச தோரணையில் செம போஸ் கொடுத்து நின்றார் ஜி.வி.பிரகாஷ். தற்போது அவருக்கு பட்டம் எதுவும் கொடுக்கப்படாததால், இசை நாயகன் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.