ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
களவாணி படத்தை இயக்கிய சற்குணம், அதற்கடுத்து இயக்கிய படம் வாகை சூடவா. தேசிய விருது பெற்ற இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். அதில் சில பாடல்கள் ஹிட்டாகி அவரை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டின. அதோடு, கமல்ஹாசன் போன்ற ஜாம்பவான்களின் கவனத்துக்கும் சென்றார் ஜிப்ரான்.
விளைவு, தனது விஸ்வரூபம்-2 படத்திற்கு அவரை பின்னணி இசையமைக்க வைத்தார். அதில் கமலுக்கு முழு திருப்தி ஏற்படவே இப்போது தான் நடித்து வரும் உத்தமவில்லன் படத்திலும் ஜிப்ரானுக்கு இசையமைக்கும் வாய்ப்புக்கொடுத்துள்ளார். அதனால், அடுத்தபடியாக மேலும் சில மெகா படங்களுக்கு இசையமைக்கவும் பேச்சுவார்த்தையில் இருக்கிறார்.
இந்த நேரத்தில், நய்யாண்டி படத்திற்கு பிறகு டைரக்டர் பாலாவின் தயாரிப்பில் தான் இயக்கவிருக்கும் படத்தில் இசையமைக்க மீண்டும் ஜிப்ரானை அழைத்தார் சற்குணம். ஆனால், கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் தற்போது கவனத்தை திருப்பி விட்ட ஜிப்ரான், அந்த படத்தில் தான் பிசியாக இருப்பதாக சொல்லி சற்குணம் படத்துக்கு இசையமைக்க தனக்கு போதிய நேரம் இல்லை என்று தவிர்த்து விட்டாராம்.
இதனால், தான் அறிமுகம் செய்தவர் இப்போது பிஸி என்பதை காரணம் காட்டி தன்னை தவிர்க்கிறாரே என்று மனதளவில் நினைத்துக்கொண்டாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், தனது விரலுக்கு ஏற்ற வீக்கமாய் சில வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களிடம் பேசி வருகிறார் சற்குணம்.