பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
செகண்ட் இன்னிங்சில் தான் நடித்த ஆரம்பம், ராஜா ராணி போன்ற படங்கள் ஹிட்டடித்ததால் நயன்தாராவின் நடவடிக்கையில் ஏகப்பட்ட மாற்றங்கள். குறிப்பாக, படப்பிடிப்புக்கு நினைத்த நேரத்திற்கு வருவார். நினைத்த நாளில் லீவு போட்டு விடுவார். அதோடு இல்லாமல், படத்துக்குப்படம் லட்சங்களை உயர்த்திக்கொண்டே போனார்.
அதிலும் அனாமிகா படத்தில் நடித்து வந்தபோது அவர் செய்து வந்த அலம்பல் கொஞ்சநஞ்சமல்ல. தென்னிந்தியாவின் வித்யாபாலன் நான்தான் என்கிற அளவுக்கு பில்டப் கொடுத்தார். இதற்கிடையே அதே அனாமிகா படத்தின் ப்ரமோஷன் காட்சிகளுக்கு அழைத்தபோது, நான் ரொம்ப பிஸி, அதனால் உங்கள் படத்தின் பப்ளிசிட்டிக்கெல்லாம் என்னை கூப்பிடாதீர்கள். அது என் வேலையும் அல்ல. நடித்ததோடு எல்லாம் முடிந்து போச்சு என்கிற அளவுக்கு பேசினார். விளைவு, எந்த தெலுங்கு படத்திலும் ஒரு வருடத்துக்கு நடிக்க முடியாத தடை உத்தரவில் இருக்கிறார் நயன்தாரா.
இதன்காரணமாக, வாலு படத்தில் நடிக்கச்சென்று விட்ட சிம்பு, இது நம்ம ஆளு படத்தை கிடப்பில் போட்டபோது, நான் ஏற்கனவே கொடுத்த கால்சீட்டை வீணடித்து விட்டனர் அதனால் இப்போதைக்கு என்னால் கால்சீட் ஒதுக்கி தர முடியாது என்று காரசாரமாக பேசி வந்த நயன்தாரா, உதயநிதியின் நண்பேன்டா படத்திற்கும் பேசினபடி கால்சீட் கொடுக்காமல் டீலில் விட்டார்.
ஆனால், ஆந்திராவில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, ரொம்ப நல்ல பிள்ளையாகி விட்டார் நயன்தாரா. பழைய அடாவடித்தனங்கள் எதுவும் செய்யாமல் அவர்கள் கேட்ட தேதியில் கால்சீட் கொடுத்து நடித்து வருகிறார். அதோடு, பகலில் சிம்பு படம் என்றால், இரவில் உதயநிதி படம் என்று ஓய்வில்லாமல் நடித்து வருகிறார் நயன்தாரா.
ஆந்திராவில் விழுந்த அடியால் இப்படி அடியோடு அம்மணி மாறிப்போயிருப்பதால், அவரது அதிரடி மாற்றம் கண்டு ஒதுங்கி நின்ற சில இயக்குனர்கள் இப்போது அவரை தாராளமாக அணுகி கதை சொல்லி வருகின்றனர்.