சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
விஜயாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்து வரும் படம் சகாப்தம். இந்த படத்தின் முதல்கட்ட படிப்பிடிப்புகள் பொள்ளாச்சி பகுதியில் நடந்தது. அதனை விஜயகாந்த் நேரடியாக கவனித்து வந்தார். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மலேசியாவில் நடக்கிறது. மலேசியா, தாய்லாந்து, நாடுகளில் 3 பாடல் காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக சண்முக பாண்டியன் உள்ளிட்ட படக்குழுவினர் 4 நாட்களுக்கு முன்னதாகவே மலேசியா சென்று விட்டனர். விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும் நேற்று மாலை மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கோலாலம்பூர் புறப்பட்டுச் சென்றார்.
விஜயகாந்தின் மலேசிய பயணம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. விமான நிலையத்தில் விமானம் புறப்புடுவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னால் விமான நிலையம் வந்த விஜயகாந்த், தனி வழிமூலம் உள்ளே சென்றார். இதற்கான ஏற்பாடுகளை விமான நிலைய அதிகாரிகளே செய்து வைத்திருந்தனர்.
மலேசியாவில் தொடர்ந்து 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. அதில் விஜயகாந்த், தனது மகனுடன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது.