துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
இயக்குனர் ஜெயம்ராஜா, 'வேலாயுதம்' படத்திற்கு பிறகு சொந்த கதையை படமாக எடுத்து வருகிறார். இதில் ஹீரோவாக அவரது தம்பி ஜெயம் ரவி நடிக்கிறார். ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படத்தின் 40 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. படத்தில் ஒரு பவர்புல் வில்லன் கேரக்டர் வருகிறது. இதற்கு சரியான வில்லனைத் தேடி வருகிறார் ராஜா.
வில்லன் என்றால் கோட்டாச சீனிவாசராவ், நாசர் மாதிரி வழக்கமான வில்லன்கள் இல்லையாம். இன்றைக்கு டாப்பில் இருக்கும் ஒரு ஹீரோவையே வில்லனாக்க முயற்சித்து வருகிறாரம். ஜெயம் ரவிக்கு வில்லான நடிக்க அவரது நெருங்கிய நண்பர்களான விஷால், ஜீவா, சிம்பு, ஆர்யா, ஆகியோரிடம் இதுகுறித்து பேச்சு நடத்தியிருக்கிறார் ராஜா. கதையை கேட்ட எல்லோருக்கும் கதை பிடித்திருந்தாலும் வில்லனாக நடித்தால் இமேஜ் மாறிவிடுமோ என்கிற தயக்கம் இருக்கிறதாம். இருந்தாலும் ஆர்யா மட்டும் பாசிட்டிவான பதிலை சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. என்றாலும் பெரிய ஹீரோ வில்லனாக நடிக்கும் விஷயத்தில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை என்று ராஜா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.