தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது தில் தடாக்னே டு என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் ஐரோப்பிய நாடுகளில் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஆடம்பர குருஸ் கப்பலில் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் படப்பிடிப்பை பாதியில் நிறுத்தி விட்டு இந்தியா திரும்பினார் பிரியங்கா சோப்ரா. காரணம் அவரது தந்தை.
அவரது தந்தை டாக்டர் அசோக் சோப்ரா. ராணுவத்தில டாக்டராக பணியாற்றி பல வீரர்களின் உயிரைக் காப்பாற்றியவர். அவர் மீது ப்ரியங்காவுக்கு அளவுகடந்த பாசம் உண்டு.
சமீபத்தில்தான் அவர் இறந்தார். அவரது நினைவை போற்றும் வகையில் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள ஒரு சாலைக்கு டாக்டர் அசோக் சோப்ரா என்று மும்பை மாநகராட்சி பெயரிட்டுள்ளது. இதற்காக ஒரு விழாவையும் அது ஏற்பாடு செய்துள்ளது. இந்த தகவல் பிரியங்காவுக்கு கிடைத்ததும் அடுத்த பிளைட் பிடித்து இந்தியா திரும்பி விட்டார். "என் தந்தைக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய கவுரவம் இது. உலகத்தில் வேறு எந்தவொன்றுக்காகவும் இந்த விழாவை நான் தவற விடவிரும்பவில்லை" என்று டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார். பிரியாங்கா சோப்ரா.