திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
விருமாண்டி படத்தின் மூலம் அறிமுகமானவர் பசுபதி. அதன் பிறகு பல படங்களில் குணசித்திர நடிகராகவும், வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்துள்ளார். அடிப்படையில் நாடக நடிகரான பசுபதி மீண்டும் நாடகத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
மேஜிக் லேண்ட் நிறுவனம், மற்றும் எஸ்.எஸ்.இண்டர்நேஷன் அமைப்பும் இணைந்து பொன்னியின் செல்வன் நாடகத்தை கடந்த 7ந் தேதி சென்னை மியூசிக் அகடாமியில் அரங்கேற்றியது. கல்கியின் வரலாற்று நாவலை நடிகர் குமரவேல் நாடக வடிவமைக்கியிருக்கிறார். இந்த நாடகம் நிஜமான வாள் சண்டைகள், தோட்டா தரணியின் பிரமாண்ட அரண்மணை செட்டுகளில் நடக்கிறது. வருகிற 14ம் தேதி வரை நடக்கும் இந்த நாடகத்துக்கு அனைத்து நாட்களும் ஹவுஸ்புல்லாகிவிட்டது.
இந்த நாடகத்தில் திரைப்பட நடிகர் பசுபதி, பொன்னியின் செல்வனின் முக்கிய கதாபாத்திரமான ஆதித்ய கரிகாலனாக நடிக்கிறார். போ.மு.ராமசாமி பெரிய பழுவேட்டையராக நடிக்கிறார். ஸ்ரீதரன் பொன்னியின் செல்வனாக நடிக்கிறார். பிரவீன் என்பவர் இயக்குகிறார்.
இந்த நாடகத்தின் ஒத்திகை, மற்றும் நாடகத்திற்காக தனது சினிமா படப்பிடிப்புகளை மூன்று மாதத்திற்கு தள்ளி வைத்திருக்கிறார் பசுபதி.