சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
கோலிவுட்டில் குறும்பட டைரக்டர்களுக்கு விஜயசேதுபதியின் வரவுக்கு பிறகுதான் ஒரு மரியாதை ஏற்பட்டது. அதற்கு முன்பெல்லாம் வித்தியாசமான படங்களை இயக்கி அவர்கள் எந்த நடிகரிடம் போட்டுக்காட்டினாலும் அந்த கதையை நம்பி யாருமே நடிக்க முன்வரவில்லை. ஆனால் விஜயசேதுபதி குறும்படம் நடித்து வளர்ந்தவர் என்பதோடு, தன்னை வைத்து குறும்படமெடுத்த இயக்குனர்களுக்கு கால்சீட் கொடுத்து நடித்தார்.
அப்படி அவர் நடித்த பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்கள் மெகா ஹிட்டடித்ததால், அந்த படங்களை இயக்கியவர்களின் படங்களில் நடிக்க பல முன்னணி ஹீரோக்களே ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் இப்போது சந்தானமும் சேர்ந்துள்ளார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை அடுத்து மீண்டும் அதே பிவிபி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் தான் நடிப்பதாக அந்த படம் வெளியான நேரத்தில சொன்னார் சந்தானம்.
ஆனால், இப்போது எனது அடுத்த படத்தை நானே தயாரிக்கிறேன் என்று கூறுகிறார். இந்த படத்தையும் ஒரு புதியவர்தான் இயக்கப்போகிறாராம். சில குறும்படங்களை இயக்கிய அந்த இயக்குனர் சொன்ன கதை கொஞ்சம காமெடி, நிறைய ஆக்சன் என்று இருந்ததால் உடனே ஓ.கே சொல்லி விட்டாராம் சந்தானம். அதோடு, அது இரண்டு ஹீரோயின் கதை என்பதால், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த விசாகா சிங், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்த ஆஷ்னா சவேரி ஆகிய இருவரையும் கதாநாயகிகளாக புக் பண்ணியிருப்பவர், வல்லவனுக்கு புல்லும் ஆயதம் படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்களையே இந்த படத்திற்கும் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
தற்போது ரஜினியின் லிங்கா படத்தில் நடித்து வரும் சந்தானம், அதில் தான் நடிக்க வேண்டிய காட்சிகள் முடிந்ததும், மீண்டும் ஹீரோவாக நடிக்க அரிதாரம் பூசுகிறாராம். அப்படத்தை மின்னல் வேகத்தில் முடித்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளாராம் சந்தானம்.