மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இந்தித் திரையுலகின் பழம் பெரும் நடிகரான திலீப் குமார் பற்றி அவரது நெருங்கிய நண்பரான உதய தாரா நயார் தொகுத்து எழுதிய 'தி சப்ஸ்டன்ஸ் அன்ட் தி ஷேடோ' புத்தக வெளியீடு சில நாட்களுக்கு முன் மும்பையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்களான அமிதாப்பச்சன், தர்மேந்திரா, ஆமீர் கான், ஜிதேந்திரா, சல்மான் கானின் அப்பா சலீம் கான், வைஜெயந்தி மாலா, ஜாவேத் அக்தர், ஜீனத் அமதன், மாதுரி தீட்சித், பிரியங்கா சோப்ரா, திலீப் குமாரின் மனைவி சாய்ரா பானு உட்பல பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பலரும் திலீப் குமாரை மனதாரா பாராட்டினார்கள்.
அமிதாப்பச்சன் பேசும் போது, “இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு 'கங்கா ஜமுனா' படத்தைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். அலகாபாத்ல பிறக்காத ஒருத்தர், அந்த மொழியை அவ்வளவு அருமையா பேசி நடிச்சது, அவர் மேல எனக்கு தனி மரியாதையை கொடுத்துச்சி,” என்றார்.
தர்மேந்திரா பேசுகையில், “வடான் கி ரா மெய்ன்' படத்துல தேசியக் கொடியை கையில பிடிச்சிக்கிட்டு அவர் பாடி நடிச்சிருப்பாரு. அந்த படம் பார்த்து வெளிய வந்ததும்தான், மும்பைக்கு போயிட்டு நடிகனாகணும்னு நான் முடிவு பண்ணன்,” என்றார்.
ஆமீர்கான் பேசும் போது, “இந்த உலகத்துலயே திலீப் குமார் சாருக்கு நான்தான் மிகச் சிறந்த ரசிகர்னு நினைக்கிறேன். மிகச் சிறந்த முன்னுதாரணமான மனிதர். அவரைப் பார்த்துதான் நான் வளர்ந்தேன், அவர் படங்களைப் பார்த்துதான் நான் நிறைய கத்துக்கிட்டேன். அவரை மாதிரி யாராலயும் இருக்க முடியாது, இனியும் வர முடியாது, இங்க இருக்கிறதுல நான் ரொம்ப பெருமைப்படறேன், ” என்றார்.
முன்னதாக வைஜெயந்தி மாலா, மாதுரி தீட்சித், பிரியங்கா சோப்ரா ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்கள்.