ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு |
நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் குத்து ரம்யா என்கிற ரம்யா ஸ்பந்தனா. கர்நாடகாவின் முன்னாள் முதல்வரான எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேத்தியான இவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, கட்சியில் சேர்ந்த சில மாதங்களிலேயே தாத்தாவின் செல்வாக்கைப் பயன்படுத்தி கடந்த முறை எம்.பி. இடைத்தேர்தலில் சீட் வாங்கினார். கர்நாடகா மாநிலத்தில் உள்ள மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.பியான பிறகு நடிப்புக்கு முழுக்குப்போட்டுவிட்டு முழுநேர அரசியல்வாதியாக செயல்பட்டார்.
இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் அதே மாண்டியா தொகுதியில் போட்டியிட்டார். இம்முறை தோல்வியடைந்தார் ரம்யா. தொகுதிக்கு ஏராளமான விஷயங்கள் செய்து கொடுத்ததினால் நிச்சயம் வெற்றியடைவோம் என்ற எதிர்பார்த்த ரம்யாவுக்கு தோல்வி கடும் அதிர்ச்சியைக்கொடுத்துவிட்டது போலும். எனவே ஆன்மிகத்தின் பக்கம் தன் கவனத்தை திருப்பியுள்ளாராம் ரம்யா. யோகா, தியானம் என்று மனதை அமைதியடையச் செய்வதோடு, சமீபகாலமாக யாருடனும் பேசாமல் மவுனவிரதமும் கடைபிடிக்கிறாராம் ரம்யா.
ஒரு தோல்வியிலேயே இப்படி துவண்டு போயிட்டாரே..!