இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கார்த்தியை வைத்து பிரியாணி படத்தை இயக்கிய வெங்கட்பிரபு அடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதாக அறிவித்து பல மாதங்களாகிவிட்டன. அந்தப்படத்தில் பிரேம்ஜி முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது தவிர அப்படம் பற்றி வேறு செய்தி இல்லை. தற்போது வெங்கட்பிரபுவின் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. வெங்கட் பிரபு - சூர்யா முதன் முறையாக இணைய உன்ன அந்தப்ம் படத்திற்கு 'பூச்சாண்டி' என தலைப்பு வைத்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜாதான் இசையமைக்கிறார்.
பூச்சாண்டி படத்தில் சூர்யாவுக்கு இரண்டு ஜோடிகள். ஒருவர்.. நயன்தாரா, மற்றொருவர் எமி ஜாக்சன். ஆதவன் படத்துக்குப் பிறகு சூர்யாவும் நயன்தாராவும் இந்தப்படத்தில் இணைகிறார்கள். ராத்திரியானால் பார்ட்டி பண்ணுவதை வழக்கமாக வைத்திருந்த வெங்கட்பிரபு பூச்சாண்டி படத்தின் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுவதற்காக கடந்த சில மாதங்களாக பாண்டிச்சேரி சென்று அங்குள்ள மதர் ஆசிரமத்தில் தங்கி ஸ்கிரிப்ட் வொர்க்கை முடித்துவிட்டு வந்திருக்கிறார்.
ஆமா..அதென்ன பூச்சாண்டி? ஜாலியான பேய்ப்படமாம். பேய் யாரு நயன்தாராவா?