விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய பல படங்களில் உதவி இயக்குனராக இருந்தவர் சசிதரன். தற்போது அட்டகத்தி தினேஷ், ஹரிபிரியா நடிப்பில் 'வாராயோ வெண்ணிலாவே' படத்தை எடுத்து முடித்துள்ளார். விரைவில் படம் வெளி வர உள்ளது. இன்னும் சில தினங்களில், 'நெடுஞ்சாலை' ஆரி, நடிக்க 'கடை எண் 6' என்ற பெயரில் காமெடி கலந்த படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த இயக்குனரை பற்றி ஒரு செய்தி. சில தினங்களுக்கு முன் தன் பிறந்தநாளை கொண்டாடிய சசி, தான் வசிக்கும் ஆழ்வார் திருநகர் பகுதியில் கடந்த 10 வருடமாக சத்தம் இல்லாமல் மர கன்றுகளை நட்டு வருகிறாராம். இவர் நட்டு வைத்த பல செடிகள் இன்று மரமாக வளர்ந்து நிற்பதை பார்க்கும் போது மனம் சந்தோசமாக இருக்கிறதாம் சசிக்கு. தன் பிறந்தநாளில் மரம் நடுவதை எப்போதும் வழக்கமாக வைத்திருக்கிறாராம் சசி.
தொடரட்டும் உங்கள் சேவை!