ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருந்தார் சித்தார்த். சில வருடங்களுக்கு முன் தெலுங்கு மீடியாக்களைப் பற்றி தரக்குறைவாக பேசியதை அடுத்து சித்தார்த்துக்கு எதிராக தெலுங்கு மீடியாக்கள் திரண்டன. வேறு வழியில்லாமல் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை சமாளித்தார். ஆனாலும் சித்தார்த் மீதான மீடியாக்களின் கோபம் நீறுபூத்த நெருப்பாக கனன்றுகொண்டுதான் இருக்கிறது. அதன் காரணமாக சித்தார்த் நடித்த படங்களுக்கு தெலுங்கு மீடியாக்கள் அவ்வளவாக சப்போர்ட் பண்ணுவதில்லை. இதை தெலுங்குப்பட உலகம் கவனிக்கத்தவறவில்லை. எனவே சித்தார்த்தை கமிட் பண்ண தயக்கம் காட்டுகின்றனர் தெலுங்குப்பட அதிபர்கள்.
இந்த விஷயத்தை மிக தாமதமாகவே உணர்ந்திருக்கிறார் சித்தார்த். தான் உதிர்த்த அநாகரிக வார்த்தைகள் தன்னுடையை கேரியரையே காலி பண்ணுமளவுக்கு வேரூன்றிவிட்டதை புரிந்து கொண்டார். எனவே ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டுக்கு ஜம்ப் பண்ண முடிவு செய்துவிட்டாராம். ஜிகர்தண்டா, காவியத்தலைவன், லூசியா என வரிசையாக சித்தார்த் தமிழ்ப்படங்களில் நடிக்க இதுதான் காரணமாம்.