ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அரசியலுக்கு வந்த பிறகு சினிமாவை விட்டு கிட்டத்தட்ட விலகி விட்டேன். சினிமா செய்திகளைக் கூட பத்திரிகைகளில் படிப்பதில்லை என்று நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கூறியுள்ளார். சமீப காலமாக சினிமா விழாக்களில் பங்கேற்பதை குறைத்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜயகாந்த் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் கோரிப்பாளையம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், பொதுவாக சினிமா விழாக்களில் நான் பங்கேற்பதில்லை. அரசியலுக்கு வந்த பிறகு சினிமாவை விட்டு கிட்டத்தட்ட விலகி விட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். சினிமா செய்திகளைக் கூட பத்திரிகைகளில் படிப்பதில்லை. யார் நடிக்கிறார்கள், யார் புதிய டெக்னீஷியன்கள் என்றுகூட எனக்குத் தெரியாது. இந்த கோரிப்பாளையம் படத்தை தயாரிக்கிற மைக்கேல் ராயப்பன் என் கட்சிக்காரர் என்பதால் வந்தேன், என்றார்.
மேலும் அவர் கூறுகையில், சினிமா விழாக்களுக்கு வருவதால் எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. பாவம் உங்களுக்குத்தான் பிரச்சினை. தேவையில்லாத தொந்தரவுகள் வரக்கூடும். அதனால்தான் விலகியிருக்கிறேன். இந்த படம் கோரிப்பாளையம் பேரைக் கேட்டதும் எனக்கு பழைய நினைவுகள் வந்து விட்டன. நானும் மதுரைக்காரன்தான். அந்த மண்ணுலயே பிறந்து வளர்ந்தவன். கோரிப்பாளையம் எப்பேர்ப்பட்ட இடம் என்று மதுரைக்காரங்களுக்கு தெரியும். இன்னிக்கு எந்தப் படமா இருந்தாலும் அது மதுரைக்காரங்க படமா இருக்கு. இங்கே பேசியவர்கள், விநியோகஸ்தர்கள் சிரிச்சாத்தான் அந்தப் படம் வெற்றிப் படம் என்று சொன்னார்கள். அதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். ஜனங்க நல்லாருக்குன்னு சொல்லணும். ஜனங்க சிரிக்கனும்.. சந்தோஷமா இருக்கணும். அதுதான் நல்ல படம். நமக்காகவே படம் எடுத்தா எப்படி? ஜனங்களுக்காக எடுக்கணும். இன்னொன்னு சிக்கனமா எடுக்கணும். சும்மா 200 ரோல் 300 ரோலுக்கு சினிமா எடுத்து வெட்டி வீசிக்கிட்டிருக்கக் கூடாது. என்ன எடுக்கறோம்னு திட்டம் போட்டு எடுத்தா சிக்கனமாகவும் எடுக்கலாம் சீக்கிரமாவும் எடுக்கலாம், லாபமும் பார்க்கலாம், என்றார்.
விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம நாராயணன், இயக்குநர்கள் ராஜ்கபூர், ராசு மதுரவன், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், நடிகர் லாரன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.