ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சில தினங்களுக்கு முன் வெளியான மஞ்சப்பை படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விமல் கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் தாத்தா பேரன் இருவருக்குமிடையிலான பாசத்தைச் சொல்கிற படம். தாத்தாவாக ராஜ்கிரணும், பேரனாக விமலும் நடித்துள்ளனர். விமல் வழக்கம்போல் அலட்டிக்கொள்ளாமல் நடிக்க, ராஜ்கிரணோ கிராமத்து தாத்தாவாகவே வாழ்ந்திருக்கிறார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ராஜ்கிரணின் நடிப்பு பேசப்படும் அளவுக்கு அமைந்திருக்கிறது. இதற்கிடையில் மஞ்சப்பை படத்தை வாங்கி வெளியிட்டுள்ள லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் விமலை டம்மியாக்கிவிட்டு ராஜ்கிரணுக்கு முக்கியத்துவம் கொடுத்து விளம்பரங்கள் செய்து வருகிறது. மஞ்சப்பை பற்றி மீடியாக்களுக்கு அனுப்பிய செய்திகளிலும் ராஜ்கிரண் புராணம்தான். விமல் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு அப்செட்டாகிவிட்டாராம் விமல். ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு வெற்றிப்படம் கொடுத்திருக்கேன். அந்த சந்தோஷத்தையே கெடுத்துட்டாங்களே என்று வருத்தப்படுகிறாராம் விமல்.