ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'மறுபடியும், மகளிர் மட்டும்' போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை ரோகிணி. திறமையான நடிகையாக இருந்தும் இந்த கமர்ஷியல் சினிமா உலகில் இவரைப் போன்ற நடிகைகள் அவ்வளவாகப் பிரகாசிக்க முடியாமல போய்விட்டது வருத்தமான ஒன்றுதான். இவர் தற்போது 'அப்பாவின் மீசை' என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறியிருக்கிறார். மறைந்த நடிகர் ரகுவரனைத் திருமணம் செய்து கொண்ட பின் அதிகமான படங்களில் நடிக்கவில்லை என்றாலும், ஒரு சில படங்களில் சிறந்த குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசனைப் பற்றிய அவரது அனுபவத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். எதையும் முகத்திற்கு நேராகப் பேசும் குணம் கமல்ஹாசனுக்குக் கிடையாது என அவர் சொல்லியிருக்கிறார். “கமல்ஹாசன் பலருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷனா இருப்பவர். எவ்வளவோ விதமான தகவல்களை அவர் மூளையில வச்சிருப்பாரு. அதெல்லாம் கம்பயூட்டர்ல கூட இருக்குமாங்கறது சந்தேகம்தான். புதுசு புதுசா பல விஷயங்களை கத்துக்கிட்டேயிருப்பாரு. இவ்வளவு விஷயங்களை கத்துக்கிட்டு என்ன பண்ணுவாருன்னு நமக்கு தோணும். ஆனால், அப்படிப்பட்ட தேடல்தான் அவரை உயிர்ப்போட வச்சிருக்கு.
நல்ல விஷயங்களை யார் செய்தாலும் பாராட்டுவாரு, ஆனால், முகத்துக்கு நேரா எதையுமே பாராட்ட மாட்டாரு. நான் அவர் கூட பல படங்கள்ல வேலை பார்த்திருக்கேன். ஆனால், பாராட்டியதே கிடையாது. ஒரு முறை 'உன்னைப் போல் ஒருவன்' படத்தோட டப்பிங்குக்காக போயிருந்தேன். ஆனால், 'டப்பிங்' பேசறதப் பத்தி அவர் கண்டுக்கவே இல்லை. அப்புறம்தான் தெரிஞ்சது, அவர் மிஷ்கினைப் பத்திப் பாராட்டிப் பேசத்தான் என்னைக் கூப்பிட்டிருக்காருன்னு. மிஷ்கின் இயக்கத்துல வந்த 'நந்தலாலா' படத்தைப் பத்தி பாராட்டிக்கிட்டே இருந்தாரு. ஒருத்தரைப் பத்தி அவங்க கிட்ட பாராட்டாம, அடுத்தவங்க கிட்ட பாராட்டறதுதான் கமல்ஹாசனோட பாணி, ” என்றார் ரோகிணி.