'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பழம்பெரும் சினிமா ஒளிப்பதிவாளர் அசோக்குமார், ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜானி, கை கொடுக்கும் கை, காளி, மன்னன், வெற்றி விழா, சூரியன், உல்லாசப் பறவைகள் உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில், 125 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளவர், அசோக்குமார், 72. அவர், காமாக்னி, அன்று பெய்த மழை படங்களையும் இயக்கியுள்ளார். நெஞ்சத்தை கிள்ளாதே படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது உட்பட, தமிழகம், ஆந்திரா, கேரள மாநில விருதுகளும் பெற்றுள்ளார்.கடந்த ஆண்டு, டிசம்பரில், ஐதராபாத் சென்றிருந்தபோது, திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால், அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன் பின், சென்னையில் வீட்டிலிருந்தவருக்கு, கடந்த மாதம் மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டது. சென்னை, காட்டாங்கொளத்தூரில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆபத்தான நிலையில், செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.