ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்தித் திரையுலகின் முன்னணி நடிகையான கரிஷ்மா கபூர், அவரது கணவரை விவாகரத்து செய்வதற்கு ஏற்கெனவே விண்ணிப்பித்து விட்டார். இரு குழந்தைகளுக்குத் தாயான பின்னும் அவருக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக விவாகரத்து செய்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே கரிஷ்மா கபூர் மறுமணம் செய்ய முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. மும்பையைச் சேர்ந்த பிசினஸ்மேனான சந்தீப் என்பவரை அவர் மறுமணம் புரிய வாய்ப்புள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கரிஷ்மா பிரச்சனையில் இருந்த போது அவருடன் நட்பாக பழக ஆரம்பித்த சந்தீப், போகப் போக அவருடன் நெருக்கமாகப் பழகியிருக்கிறார். விவாகரத்து கிடைத்த பின் கரிஷ்மா அவரை மணமுடிக்கலாம் என்கிறார்கள்.
பொதுவாகவே கரிஷ்மா அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி வாயை திறப்பதே கிடையாது. இந்த விஷயத்திலும் அவர் எதுவுமே பேசமாட்டார் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். ஆனால், கரிஷ்மாவின் புதிய உறவுக்கு அவரது குடும்பத்தார் ஆதரவாக இருக்கிறார்களாம். அதோடு அவரது தங்கையும் நடிகையுமான கரீனா கபூர், அவரது கணவரும் நடிகருமான சைப் அலிகான் ஆகியோரும் கரிஷ்மாவுக்கு ஆதரவாக அனைத்து விஷயங்களையும் செய்து வருகிறார்களாம்.
விவாகரத்தும், மறுமணமும் மும்பை திரையுலக வாழ்க்கையில் சாதாரண விஷயம்தானே என்கிறார்கள் அங்குள்ளவர்கள்…