ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மு.களஞ்சியம் இயக்கிய ஊர் சுற்றி புராணம் படத்தில் 10 நாட்கள் நடித்து கொண்டிருந்தபோது, ஆந்திராவுக்கு ஓட்டம் பிடித்த அஞ்சலி, இப்போதுவரை அந்த படத்தை முடித்துக்கொடுக்கவில்லை. அவர்களுக்கிடையே என்ன பிரச்னை நடந்ததோ தெரியவில்லை, இப்போதுவரை அந்த படத்தில் நடித்துக்கொடுக்க மறுத்து வருகிறார் அஞ்சலி. இதற்கிடையே என் படத்தில் நடித்த பிறகுதான் வேறு தமிழ்ப்படங்களில் நடிக்க அஞ்சலியை அனுமதிக்க வேண்டும் என்று மு.களஞ்சியம் தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதம் கொடுத்திருக்கிறார். என்றாலும் அஞ்சலி அது எதையும் பொருட்படுத்தவில்லை. ஊர் சுற்றி புராணம் படத்தில் நடிப்பது பற்றி எந்த பதிலும் சொல்லவில்லை.
இந்த நிலையில், களஞ்சியம் இதுகுறித்து கூறுகையில், இந்த பிரச்னையினால் எனக்கும், அஞ்சலிக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனபோதும், அவர் எனக்காக நடிக்க வேண்டாம். சினிமா என்கிற தொழிலுக்காகவும், எனது கதைக்காகவும் நடிக்க வேண்டும் என்று அஞ்சலிக்கு அழைப்பு விடுத்துளளார். மேலும், சிம்புக்கும், நயன்தாராவுக்கும் ஏற்கனவே பிரச்சினைதான். ஆனபோதும், இதுநம்ம ஆளு படத்தின் கதை பிடித்திருந்ததால் அவர் மீண்டும் சிம்புவுடன் இணைந்து நடிக்கவில்லையா? தொழிலை மதிக்கிறவர்கள் தனிப்பட்ட விரோதத்தை கருத்தில் கொள்ள மாட்டார்கள். இந்த விசயத்தில் நயன்தாரா போன்ற நடிகைகளிடமிருந்து அஞ்சலி நிறையவே பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார் களஞ்சியம்.