பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தான் நினைத்த லொகேசனில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார் டைரக்டர் ஷங்கர். சில நாட்கள் படமாக்க வேண்டிய லொகேசன் என்றாலும் ஆஸ்திரேலியா, அமெரிக்கா என்று சென்று விடுவார். ஆனால், அப்படிப்பட்ட ஷங்கருக்கு, ஐ படத்தில் விக்ரம்-எமிஜாக்சன் ஆடிப்பாடும் ஒரு டூயட் பாடல் காட்சியை படமாக்க சைனாவில் உள்ள ஒரு பூங்காவில் அனுமதி கிடைக்கவில்லையாம்.
விளைவு, அதே பூங்காவை தானே உருவாக்க திட்டமிட்டார் ஷங்கர். அதற்காக ஏரியா தேடி வந்தவர் பொள்ளாச்சியில் ஒரு சில ஏக்கர்களில் ஒரு இடத்தை பிடித்தார். அந்த இடத்தில் சைனாவில் உள்ள பார்க்கில் என்னென்ன மரம் செடி கொடிகள் உள்ளதோ அது அத்தனையும் அங்கே வளர்க்கத் தொடங்கினார்.
அப்படி, பல மாதங்களாக அந்த சைனா பார்க்க பொள்ளாச்சியில் வளர்க்கப்பட்டு வந்திருக்கிறது. கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப்பிறகு பூங்கா பசுமையானதும், அந்த லொகேசனில் ஒரு முழுப்பாடலையும் படமாக்கியிருக்கிறார். அந்த பூங்காவை உருவாக்கவே கிட்டத்தடட ஒரு கோடி ஆனதாக சொல்கிறார்கள். அதையடுத்து படப்பிடிப்பு நடத்தினார்களாம். இப்படி ஐ படத்தின் ஒவ்வொரு முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளுக்காகவும் டயம் எடுத்து படமாக்கியிருக்கிறாராம் ஷங்கர்.