ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வெளிநாட்டில் தொழிலதிபராக இருந்து சினிமா நடிகர் ஆனவர் ஆர்.கே. சின்ன சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் எல்லாம் அவன் செயல் என்ற படத்தின் ஹிட் மூலம் பிரபலமானார். மலையாளத்தில் வெளிவந்த சிந்தாமணி கொலை கேஷ் என்ற படத்தின் ரீமேக் அது. அதை இயக்கிய ஷாஜி கைலாஷ்தான் இதையும் இயக்கி இருந்தார். அதற்கு பிறகு ஆர்.கே. அழகர் மலை, புலிவேஷம் படங்களில் நடித்தார். இரண்டு படமுமே தோல்வி அடைந்தது. அவன் இவன், ஜில்லா படங்களில் சிறிய கேரக்டரில் நடித்தார். இப்போது மீண்டும் சொந்த தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் பெயர் என்வழி தனி வழி. இதை ஷாஜி கைலாஷ் இயக்குகிறார்.
மீண்டும் மலையாள இயக்குனரிடம் தஞ்சம் அடைந்தது பற்றி ஆர்.கே.கூறியதாவது: நானே தயாரிச்சு நிறைய படங்கள்ல நடிக்கலாம், அந்த சக்தி என்கிட்ட இருக்கு, ஆனால் நல்ல படங்களைத் தேடிப்போய் நடிக்கிறேன். அவன் இவன், ஜில்லா படங்கள்ல அப்படித்தான் நடிச்சேன். எல்லாம் அவன் செயல் படத்துக்கு பிறகு ஒரு காமெடி படத்துல நடிக்க முடிவு பண்ணினேன். அதுதான் காமெடிக்கு புகழ்பெற்ற ராஜ்குமார் இயக்கத்துல அழகர்மலை படத்துல நடிச்சேன்.
அப்புறம் நடிக்கிறதுக்கு ஸ்கோப் நிறைய வேணும்னு முடிவு பண்ணி பி.வாசு சார் இயக்கத்துல புலிவேஷத்துல நடிச்சேன். படத்தோட ரிசல்ட் எப்படி வேணாலும் இருந்துவிட்டு போகட்டும் என்னோட கேரக்டர்கள்ல நான் புரூப் பண்ணினேன். இப்போ மீண்டும் ஒரு ஆக்ஷன் படத்துல நடிக்க முடிவு பண்ணினேன். அதனால் ஏற்கெனவே சேர்ந்து ஹிட் கொடுத்த ஷாஜி கைலாஷ் இயக்கத்துல என்வழி தனிவழியில நடிக்கிறேன்.
இதுல போலீஸ் ஆபீசரா நடிக்கிறேன். வழக்கமான போலீஸ் ஆக்ஷன், சேசிங், என்கவுண்டர் அப்படியெல்லாம் கிடையாது. இது போலீசுக்குள்ள நடக்குற ஈகோ மோதல் கதை. நிச்சயமாக இது மற்ற போலீஸ் கதைகள்லேருந்து முற்றிலும் மாறுபட்டதா இருக்கும். என்கிறார் ஆர்.கே.