வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி தன் கணவர் ராஜ்குந்த்ராவுடன் மாராட்டிய மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர் அங்குள் ஷானி ஷிங்கனாபூர் சேவை அமைப்புக்கு சென்றார். அங்கு தன் கண்களை தானம் செய்தார். இதற்கான படிவத்தில் அவர் கையெழுத்திட்டுக் கொடுத்தார்.
இதுபற்றி ஷில்பா ஷெட்டி கூறும்போது: நான் இறந்த பிறகு எனது கண்களால் பயன் இல்லை. அது என் மரணத்துக்கு பிறகு மற்றவர்களுக்கு பார்வை கொடுக்கும். இதை நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. இறந்த பிறகும் வாழுகிற வாய்ப்பை கண்கள் நமக்கு வழங்குகிறது என்றார்.
வெளியில் வந்த ஷில்பாவிடம் புதிய அரசு எப்படி செயல்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு "சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்களும், வன்முறைகளும் அதிகரித்துள்ளது. புதிதாக அமைந்துள்ள அரசு பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். செலுத்தும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. என்றார்.