பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாக்யராஜ், ஊர்வசி நடித்த வெள்ளி விழா படம் முந்தானை முடிச்சு. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி வருகிறது மாப்பிள்ளை விநாயகர். முந்தானை முடிச்சு படத்தில் பாக்யராஜிற்கு ஒரு குழந்தை இருக்கும். அந்த குழந்தைய கீழே போட்டு தாண்டித்தான் ஊர்வசி பாக்யராஜை திருணம் செய்து கொள்வார். அப்படி கீழே போட்டுத் தாண்டியதால் அந்த குழந்தைக்கு தோஷம் வந்து விடுகிறதாம். இப்போது அவன் வளர்ந்து பெரியவன் ஆனதும் அவனுக்கு திருமணம் நடக்காமல் போகிறது. அதனால் பாக்யராஜும், ஊர்வசியும் சேர்ந்து அவனுக்கு எப்படி திருமணம் செய்து வைக்கிறார்கள் என்பதுதான் இரண்டாம் பாகத்தின் கதை.
பாக்யராஜ், ஊர்வசி நடிக்கிறார்கள். அவர்களது மகனாக லொள்ளு சபா ஜீவா நடிக்கிறார். ரேஷ்மி கவுதம் ஹீரோயின், ஸ்ரீராம் பத்மநாபன் இயக்குகிறார். வேகமாக வளர்ந்து வந்த இந்தப் படம் 50 சதவிகிதம் முடிந்து விட்டது. தற்போது தயாரிப்பாளரின் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக பல மாதங்களாக படப்பிடிப்பு நடக்காமல் நின்று போயிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகும் லொள்ளு சபா ஜீவா கவலையில் இருக்கிறார்.