ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராயை முதல் முதலாக திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது இயக்குநர் மணிரத்னம்தான். இருவர் படத்தில்தான் முதல் முதலாக திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் ஐஸ்வர்யாராய். அதுவும் முதல் படத்திலேயே அவரை இரட்டை வேடத்தில் நடிக்க வைத்தார். சில வருட இடைவெளிக்குப் பிறகு குரு படத்தில் அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாகவும், அதன் பிறகு சில வருட இடைவெளிக்குப் பிறகு ராவணன் படத்தில் அபிஷேக் பச்சன், விக்ரம் இரண்டு பேருக்கு ஜோடியாகவும் ஐஸ்வர்யாராயை நடிக்க வைத்தார் மணிரத்னம்.
இதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால், மணிரத்னம் - ஐஸ்வர்யா ராய் காம்பினேஷனில் வெளி வந்த மூன்று படங்களுமே வெற்றிப்படங்களில்லை. ஆனாலும் மணிரத்னம் மீது ஐஸ்வர்யாராயுக்கு அளவு கடந்த மரியாதை. திருமணம், குழந்தை என குடும்ப வாழ்க்கையில் செட்டிலானதால், சில வருடகாலமாக நடிப்புக்கு முழுக்குப் போட்டிருந்த ஐஸ்வர்யாராய், இப்போது, மீண்டும் நடிக்க முடிவு செள்திருக்கிறார். அவருடைய ரீ எண்ட்ரி மணிரத்னம் இயக்கும் படத்தில்தான். தாய்மை அடைந்தபோது செமத்தியாய் வெயிட் போட்டிருந்த ஐஸ்வர்யாராய் தற்போது தன் உடல் எடையை கணிசமாக குறைத்து வருகிறார். மணிரத்னமோ இன்னும் பத்து கிலோ எடையை குறைத்துவிட்டு ஸ்லிம்மாக வரும்படி கூறி இருக்கிறாராம்.