அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சூர்யா, கார்த்தி நடிக்கும் படங்களை சமீப காலமாக அவரது உறவினரான ஞானவேல் ராஜாதான் தயாரித்து வந்தார். அதோடு வேறு நிறுவனங்கள் தயாரித்த சில படங்களையும் ஞானவேல் ராஜா வாங்கி வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில் 'சிங்கம் 2' படத்தை தனது புதிய பட நிறுவனமான '2டி' என்ற நிறுவனத்தின் மூலம் சூர்யா வெளியிட்டார். அப்போதே திரையுலகத்தினர் ஆச்சரியமாகப் பார்த்தனர். அவர்கள் வழக்கமாக வெளியிடும் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் வெளியிடாமல் புதிதாக வெளியிடுவதற்குக் காரணம் என்ன என அனைவரும் யோசித்தார்கள். அப்போதே சூர்யாவுக்கும், ஞானவேல் ராஜாவுக்கும் பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது என்கிறார்கள். அதாவது, சூர்யாவுக்கு வரவேண்டிய சில கதைகளை அவர் கார்த்தி பக்கம் தள்ளி விடுகிறார், அதனால் இருவருக்கும் மனக்கசப்பு உருவாகிவிட்டது என்றார்கள். அப்படி அவர் தள்ளி விட்ட படங்களும் படு தோல்விப் படங்களாகவே அமைந்தது வேறு கதை.
இந்த சூழ்நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் புதிதாக உருவாக்கிய கதையை ஞானவேல் ராஜாவிடம் சொல்லியிருக்கிறார். அவரோ இந்த கதையை சூர்யாவிடம் சொல்லச் சொல்ல, பாண்டிராஜ் சூர்யாவைச் சந்தித்து கதையை சொல்லியிருக்கிறார். கதை மிகவும் பிடித்துப் போக, சூர்யா அவரது நிறுவனத்திலேயே இந்த படத்தை தயாரிக்கிறேன் என்று முடிவு செய்திருக்கிறார். இதன் பின், பாண்டிராஜ், ஞானவேல் ராஜா பக்கம் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லையாம். நாம்தானே, சூர்யாவைச் சந்திக்கச் சொன்னோம், இப்போது நம்மையே கண்டு கொள்ளவில்லையே என தனது நெருங்கிய வட்டாரங்களிடம் புலம்பித் தள்ளுகிறாராம் ஞானவேல் ராஜா.
படம் கிடைச்சதுமே பாண்டிராஜ் இப்ப மாறிட்டாரே அவரும் வழக்கமான சினிமாக்காரர்தானா என்கிறாராம்.