சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'ஐ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து, விஜய் மில்டன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார் விக்ரம். 'கோலி சோடா' படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் உருவாக்கி வைத்திருந்த கதையைக் கேட்ட விக்ரம், அந்த படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார். சமந்தா விக்ரமிற்கு ஜோடியாக நடிக்கும் இந்த படத்திற்கு 'பத்து எண்ணுறதுக்குள்ள…' என பெயரிட்டுள்ளார்கள்.
இந்த படத்திற்கு பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று சுமார் 24 கோடி ரூபாய் பைனான்ஸ் செய்ய முன் வந்திருக்கிறது. முதல் பிரதி அடிப்படையில் இந்த படத்தை அந்த நிறுவனத்திற்கு தயாரித்துத் தர வேண்டும். விஜய் மில்டனும் சரி என்று சொல்லியிருக்கிறார். படப்பிடிப்புக்கு தேதியெல்லாம் குறித்து விட்ட சமயத்தில் லிங்குசாமியால் பிரச்சனை உருவாகியிருக்கிறது. விஜய் மில்டன் இதற்கு முன் இயக்கிய 'கோலி சோடா' படத்தைக் குறைந்த விலைக்கு வாங்கி கோடி கோடியாக லாபம் பார்த்தவர் லிங்குசாமி. அந்த நப்பாசையில் விஜய் மில்டன் - விக்ரம் கூட்டணியில் உருவாகும் படத்தை வாங்கினால் தாராளமாக அள்ளலாம் என கணக்குப் போட்டிருக்கிறார். அதனால், அந்த தயாரிப்பு நிறுவனத்தை விட அதிகமாக 4 கோடி ரூபாய் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார் லிங்குசாமி.
இதைப் பற்றிக் கேள்விப்பட்டதும், இயக்குனர் விஜய் மில்டனைத் தொடர்பு கொண்ட விக்ரம், லிங்குசாமி இந்த படத்தை வாங்குவதாக இருந்தால், இந்த படத்தில் நான் நடிக்கவே மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த விஜய் மில்டன் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறாராம். இத்தனைக்கும் லிங்குசாமி - விக்ரம் இருவரும் இணைந்து 'பீமா' என்ற படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். ஒருவேளை அந்த படத்தின் தோல்வியால் இருவருக்கும் சண்டையா, அல்லது 'அஞ்சான்' படத்தில் சூர்யாவை, லிங்குசாமி நடிக்க வைத்தது காரணமா என குழம்பி வருகிறார்கள் படக் குழுவினர்.
பத்து எண்ணுறதுக்குள்ளே…என்னென்னமோ நடக்குதே….பொருத்தமாத்தான் பேரை வச்சிருக்காங்க…