ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'புத்தகம், என்னமோ ஏதோ' படங்களில் நாயகியாக நடித்தவர் ராகுல் ப்ரீத் சிங். இரண்டு படங்களுமே அவருக்கு தமிழில் மிகப் பெரிய சோதனையைக் கொடுத்து விட்டதால், அப்படியே ஆந்திரா பக்கம் தாவி, மூன்று படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை அள்ளி விட்டார். அந்த படங்களின் படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கு முன்னால் அப்படியே ஜாலியாக டூர் போக முடிவெடுத்து தாய்லாந்து நாட்டிற்கு போயிருக்கிறார்.
அங்கு பாங்காங் நகரத்தில் சுற்றிக் கொண்டிருந்த போது அவரிடம் யாரோ திருடியிருக்கிறார்கள். மனசை கினசை திருடிட்டாங்களோன்னு ஏடா கூடமா கேக்கக் கூடாது. இரண்டு படத்துல நடிச்சிருந்தாலும் இங்கேயே அவரை யாருக்கும் தெரியாது, அப்புறம் பாங்காங்குல இருக்கிறவங்களுக்கு எப்படி தெரியும். இருந்தாலும் பணத்தைப் பறி கொடுத்துட்டு ஒரு நடிகை சொல்றத நாம கேக்காம இருக்க முடியுமா…
“டக் டக்' வண்டியில என் தோழிகளோட பாங்காங்க்ல சுத்திக்கிட்டிருந்தேன். அப்ப ஒரு பைக்ல வந்த ரெண்டு பேர் என்கிட்ட இருந்த ஹேண்ட்-பேக்கை புடுங்கிட்டு ஓடிட்டாங்க. மொத்தம் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள் போயிடுச்சி. என்னோட கேமரா, இரண்டு மொபைல் போன், 60000 ரூபாய் பணம், என்னோட டெபிட் கார்டு, கிரெட்டிட் கார்டு எல்லாமே போயிடுச்சி. அதை விட முக்கியமா என்னோட கிரீன் கார்டும் போயிடுச்சி,” என கவலைப்படுகிறார். இருந்தாலும் உடனடியாக அருகிலுள்ள காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். அது பற்றிய விசாரணை நடந்து வருகிறதாம்.
அட, இந்த சீன் ரொம்ப நல்லா இருக்கேன்னு யாராச்சும் படத்துல வச்சிடப் போறாங்க…