சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
சூர்யா தற்போது நடித்து வரும் அஞ்சான் படம் ஆகஸ்ட் மாதம் வெளிவரவிருக்கிறது. மும்பை, ஐதராபாத், சென்னை என தொடர்ந்து நடைபெற்ற படப்பிடிப்புக்கு தற்போது சின்ன பிரேக். இந்த இடைவெளியில் ஏர்செல் விளம்பரப்படத்தில் நடிக்கப்போய்விட்டார் சூர்யா. பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ்மேனன் இயக்கும் இந்த விளம்பரப்படத்தில் சூர்யா நடித்து முடித்த பிறகு மீண்டும் அஞ்சான் படப்பிடிப்பு தொடங்குகிறது.
மும்பையில் ஏற்கனவே படப்பிடிப்பு நடைபெற்ற ஏரியாக்களிலேயே மீண்டும் சில காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளை எடுக்க திட்டமிட்டு வருகின்றனர். அஞ்சான் படத்தில் ராஜூ பாய் என்ற வேடத்தில் நடிக்கிறார் சூர்யா. மும்பையில் உள்ள அந்தேரி பகுதியில் மிகப்பெரிய தாதாவாக விளங்கும் ராஜூ பாயை அப்பகுதி மக்கள், அந்தேரி புலி என்று அழைக்கின்றனராம். இதை உறுதிப்படுத்துவதுபோலவே அஞ்சான் படத்தில் சூர்யாவின் அறிமுகப்பாடலில் அந்தேரி புலி என்ற வாசகங்களுடன் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன. நாயகன் படத்தில் கமல் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயர் வரது பாய். அஞ்சான் படத்திலோ சூர்யாவின் வேடமோ..ராஜூ பாய்.
என்னமோ ஒற்றுமை தெரியுதே...