இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை |
கடந்த வாரம் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த கார் விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். உயிர் பிழைத்த நாசர் மகன் பைசல் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாசரின் மனைவி கமீலா நாசர் அருகில் இருந்து கவனித்து வருகிறார். பைசல் சீட் பெல்ட் அணியவில்லை, 120 கிலோ மீட்டர் வேகத்தில் கார் வந்தது என்று தகவல்களால் மனம் நொந்திருக்கிறார் கமீலா. என் மகனை பற்றி தவறாக எழுத வேண்டாம் என்று அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது: பைசலுக்கு சின்ன வயதில் வீடியோ கேம் என்றால் உயிர். பெரியவன் ஆனதும் பிளஸ்2 கூட படிக்காமல் வீடியோ கேம் டிசைனிங் படிக்க மலேசியா சென்றான். பின்னர் சென்னையில் 3டி கேம் படித்தான். சினிமாவிற்கு டிசைன் செய்வது அவனுக்கு பிடிக்கும். அஞ்சான் படத்திற்கு டிசைன் செய்வது தொடர்பாக பாண்டிச்சேரியில் இருந்த தயாரிப்பாளர் தனஞ்செயனை பார்த்து விட்டு திரும்பியபோதுதான் விபத்து நடந்தது. அவன் சீட் பெல்ட் அணிந்ததற்கான தழும்பு அவன் தோள் பட்டையில் உள்ளது.
ஆனால் அவனைப் பற்றிய தவறான தகவல்களை எழுதி வருகிறார்கள். பைசல் படத்திற்கு பதிலாக இளைய மகன் லூத்ஃபுதீன் படத்தை வெளியிடுகிறார்கள். இந்த மூன்று பேரில் ஒருவர் எங்கள் உறவினர் என்றும் தவறாக எழுதுகிறார்கள் இது மேலும் கவலை அளிக்கிறது. நல்ல வசதிகள் இருந்தும் எங்கள் பிள்ளைகளை நடுத்தர குடும்ப வசதிகளோடுதான் வளர்க்கிறோம். நாங்கள் அறிமுகப்படுத்தினாலன்றி யாரிடமும் அவர்கள் தங்களை நாசர் மகன் என்று சொல்லிக் கொள்வதில்லை.
பைசல் பல நிறுவனங்களில் டிசைனராக வேலை பார்த்திருக்கிறான். அவர்கள் யாருக்குமே அவன் நாசர் மகன் என்பது தெரியாது. இறைவன் என் மகனை என்னிடம் முழுமையாக திரும்ப ஒப்படைப்பான் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம். டாக்டர்கள் அக்கறையோடு கவனித்து வருகிறார்கள். போனிலும், நேரிலும், அக்கறையோடு விசாரித்த, அத்தனை பேருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். என்கிறார் கமீலா நாசர்.